கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம் உட்பட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். 16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் நேஷனல் சேம்பியன்சிப் போட்டிக்கான பராமரிப்பு பணிகளை பார்வையிட்டார். புதிய உள் விளையாட்டு அரங்கங்களையும் ஆய்வு செய்தார்.


Coimbatore: கோயமுத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட R.S.புரம் மாநகராட்சி ஹாக்கி விளையாட்டு மைதானத்தின் பராமரிப்பு பணிகள் குறித்து, மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயமுத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 72-க்கு உட்பட்ட R.S.புரம் மாநகராட்சி ஹாக்கி விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு ஹாக்கி யூனிட் நிறுவனத்தால் 16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் நேஷனல் சேம்பியன்சிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாநகராட்சி ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் இன்று (11.07.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் வார்டு எண் 39-க்கு உட்பட்ட மகாராணி அவென்யூ 5வது தெருவில் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து குடியிருப்போர் நல சங்கத்துடன் கலந்துரையாடினார். பின்னர், வார்டு எண் 75-க்கு உட்பட்ட கிருஷ்ணம்பதி குளக்கரையில் நடைபெற்று வரும் ஆகாயத் தாமரை அகற்றும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



மேலும், மத்திய மண்டலம் வார்டு எண் 83-க்கு உட்பட்ட நேரு உள் விளையாட்டு மைதானத்தின் எதிரே தலா ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து மற்றும் கபடி உள் விளையாட்டு அரங்கங்கள் மற்றும் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கைப்பந்து உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றையும் மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின் போது, உதவி ஆணையர் Narmatha, செயற்பொறியாளர் Yogasithra (பொ), உதவி செயற்பொறியாளர் Savitha, Saravanakumar (பொ), மண்டல சுகாதார அலுவலர் Radhakrishnan, உதவி பொறியாளர்கள் Manjuladevi, Babu (பொ), Sathish மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...