கிணத்துக்கடவில் காட்டுப்பன்றிகள் உலா - வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் இரவு நேரத்தில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் கனகராஜ் என்ற விவசாயி தோட்டத்தில் 6 மாதத்திற்கு முன்பு நேந்திரம் வாழை பயிரிட்டு இருந்தார்.



இந்நிலையில், இந்த வாழை கன்றுகளை நள்ளிரவில் வாழைத் தோட்டத்தில் புகுந்த காட்டு பன்றிகள் கடித்துக் குதறி சேதப்படுத்தியது.

விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என கூறி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கிணத்துக்கடவு பகுதியில் கோதவாடி குளம் கரைப்பகுதியில் ஏராளமான காட்டுப் பன்றிகள் உள்ளன. இந்த காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் தோட்டத்திற்குள் கும்பலாக புகுந்து வாழை, மரவள்ளி உள்ளிட்ட பல்வேறு காய்கறி பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

வனத்துறையினர் இதனைக் கண்காணித்து இந்த காட்டுப் பன்றிகளை பிடிக்க வேண்டும்.



அப்படி இல்லையெனில் விவசாய தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் நுழையாதவாறு மின்வேலி அமைக்க வனத்துறையினர் அனுமதி தர வேண்டும். தற்போது 500 வாழைக்கன்றுகள் கோடங்கிபாளையத்தில் மட்டும் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிக்கு அரசு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...