தாராபுரம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்!

தாராபுரம் வட்டத்துக்குட்பட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 86 பைக்குகள், திருப்பூர் மாவட்ட எஸ்பி சிசாங் சாய் உத்தரவின் பேரில், தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி முன்னிலையில், ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 50 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.


திருப்பூர்: தாராபுரம் தாலுகாவுக்குட்பட்ட காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் இன்று ஏலம் விடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்துக்குட்பட்ட தாராபுரம், மூலனூர், அலங்கியம் மற்றும் குண்டடம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையதாக 86 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு அந்தந்த காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த பைக்குகளுக்கு யாரும் உரிமை கோராததால், திருப்பூர் மாவட்ட எஸ்பி சிசாங் சாய் உத்தரவின் பெயரில், தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி முன்னிலையிலும், தாராபுரம் டிஎஸ்பி தனராசு, காவல் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் மேற்பார்வையிலும், தாராபுரம் காவல் நிலையத்தில் வைத்து பகிரங்க ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்தில் 86 வாகனங்களும் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 50 ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில் திருப்பூர்,கோவை,மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான மொத்த விற்பனையாளர்கள் மற்றும் தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து பொதுமக்கள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...