உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தடையின்றி செயல்பட வேண்டும்..! - விவசாயிகள் கோரிக்கை

உடுமலை அருகேயுள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வரும் 10ஆம் தேதி கொதிகலன் இளஞ்சூடு ஏற்றும் விழா நடைபெற உள்ள நிலையில், நடப்பாண்டிலாவது அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தங்குதடையின்றி செயல்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தங்குதடையின்றி செயல்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் அரவைக்கு தேவையான கரும்பு உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம், பழனி, ஒட்டன்சத்திரம் தாலுகா விவசாயிகளிடம் பதிவு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலம் கரும்பு அரவை காலமாக உள்ளது. இந்த நிலையில் போதிய விலையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கரும்பு சாகுபடி பரப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

இதனால் ஆலையை முழுமையான அளவில் இயக்கி சர்க்கரை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இளஞ்சூடு ஏற்றும் விழா நடப்பு ஆண்டுக்கான கரும்பு அரவை விரைவில் தொடங்க உள்ளது. அதற்கான கொதிகலன் இளஞ்சூடு ஏற்றும் விழா வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஆலையின் மேலாண்மை இயக்குனர் சண்முகநாதன் தலைமையில் நிர்வாக குழு தலைவர், துணை தலைவர், உறுப்பினர்கள், கரும்பு பயிரிடுவோர் சங்க தலைவர் மற்றும் பிரதிநிதிகள், ஆலையின் தொழிற்சங்க பிரதிநிதிகள், அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் முன்னிலையில் விழா நடைபெறவுள்ளது.

மேலும் சமுதாய நலக்கூடத்தில் விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. பல்வேறு பிரச்சனைகள் காரணமாக கரும்பு அரவை துவங்க காலதாமதம் ஆன நிலையில் தற்பொழுது இளஞ்சூடு விழா 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கிடையில் நடப்பாண்டில் ஆலை தடை இல்லாமல் முழுமையாக இயங்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...