திருப்பூர் அருகே காலி கேஸ் டேங்கர் லாரியில் தீவிபத்து - பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பழங்கரை பைபாஸ் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காலி கேஸ் டேங்கர் லாரியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயால் லாரியின் முன்பகுதி எரிந்து சேதமடைந்தது.



திருப்பூர்: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே காட்டம்பட்டியில் உள்ள இன்டேன் கேஸ் சேமிப்பு கிடங்கில் கேஸ் இறக்கிவிட்டு, சென்னை நோக்கி காலி டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. ஈரோடு பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ரவி (வயது38) அந்த லாரியை ஓட்டிச் சென்றார்.



திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பழங்கரை பைபாஸ் சாலையில் லாரிகள் நிறுத்தி ஓய்வெடுக்கும் இடத்தின் அருகில் ஓய்வெடுப்பதற்காக லாரியை நிறுத்தியபோது, டிரைவர் இருக்கையின் இடது புறம் தீ பிடித்திருப்பதை கண்ட டிரைவர் ரவி தண்ணீர் ஊற்றி அணைக்க முற்பட்டார்.



அப்போது, தீ மளமளவென பரவியதால் அச்சமடைந்த டிரைவர் ரவி, வண்டியிலிருந்து எட்டிக் குதித்து தப்பியோடினார்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி மற்று திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையின் இரண்டு வாகனங்களில் வந்த 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.



இந்த விபத்தில், லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்து சேதமானது.



கேஸ் சிலிண்டர்கள் எதுவும் லாரியில் இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...