சூலூரில் 452 கிலோ குட்கா பறிமுதல் - வட மாநிலத்தவர் உட்பட இருவர் கைது!

சூலூர் அருகே குட்காவை பதுக்கி வைத்து கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 452 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தவர் உட்பட இருவரை கைது செய்தனர்.



கோவை: சூலூர் அருகே குட்காவை பதுக்கி வைத்திருந்த வட மாநிலத்தவர் உட்பட இருவரை கைது செய்த போலீசார், 452 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பள்ளபாளையம் பகுதியில் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு கடைகளுக்கு குட்கா சப்ளை செய்யப்படுவதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பள்ளபாளையம் ஆவின் டீக்கடை பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.



அப்போது கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 452 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களை பறிமுதல் செய்தனர்.



மேலும் வெளிமாநிலங்களில் இருந்து கார்களில் குட்காவை கடத்தி வந்து உள்ளூர் கடைகளுக்கு சப்ளை செய்து வந்த ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மோகன்லால் என்பவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...