ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை ரத்து செய்க! - காங்கிரஸ் கட்சியினர் பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்!

ராகுல் காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கத்தை ரத்து செய்யக்கோரி பொள்ளாச்சி தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: ராகுல்காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தியின் பதவியை பறித்து ஜனநாயக படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், MP பதவி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.



பொள்ளாச்சி மத்திய தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடியை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.



பின்னர் ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கத்தை ரத்து செய்ய கோரி மோடிக்கு எழுதிய கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளம் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...