கோவை நஞ்சுண்டாபுரம் அருகே தரைப்பால தடுப்பு சுவரில் பைக் மோதி விபத்து - ஒருவர் பலி!

நஞ்சுண்டாபுரம் பகுதியிலுள்ள தரைப்பாலத்தில் சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில், பின்னால் இருந்த தொழிலாளி, பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது தரைப்பாலத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (49). கூலி தொழிலாளியான இவர், இன்று காலை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த வினோத் (32), என்பவருடன் மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர் இருவரும் போதையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

இருசக்கர வாகனத்தை வினோத் ஓட்டிச்சென்ற நிலையில், குமார் பின்னால் அமர்ந்துள்ளார். இருவரும் நஞ்சுண்டாபுரம் அருகே உள்ள தரைப்பாலம் அருகே வந்த போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.



இதில், குமார் தூக்கிவீசப்பட்டு தரைப்பாலத்தில் இருந்து சுமார் 30 அடி கீழே விழுந்துள்ளார். அப்போது அவரது தலையில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வாகனத்தை ஓட்டிச்சென்ற வினோத் காயமடைந்தார்.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து, அங்கிருந்தவர்கள் போத்தனூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விபத்தில் சந்தேகம் உள்ளதாக குமார் உறவினர்கள் கூறியதால் வினோத்திடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...