தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கும் இரு நாள் பயிற்சி ஜூலை 14, 15 தேதிகளில் நடைபெறுகிறது. பயிற்சிக் கட்டணம் ரூ.1,770. விவரங்களுக்கு 9488518268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில், காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கும் முறைகளை கற்றுக்கொடுக்கும் இரு நாள் பயிற்சி திட்டம் வரும் ஜூலை 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.




காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில், முருங்கை பொடி, பருப்பு பொடி, சாம்பார் பொடி, பிஸ்கட், அடை மிக்ஸ், ஊறுகாய், நூடுல்ஸ் உள்ளிட்ட பல்வேறு முருங்கை சார்ந்த உணவுப் பொருட்களை தயாரிக்கும் முறைகள் கற்பிக்கப்படும்.




அதேபோல், காளான் பொடி, சூப் மிக்ஸ், பிஸ்கட், ஊறுகாய், காளான் பிழிதல் தொழில்நுட்பம் உள்ளிட்ட காளான் சார்ந்த மதிப்பூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் நவீன தொழில்நுட்பங்களும் இந்தப் பயிற்சியில் அறிமுகப்படுத்தப்படும்.




இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் ரூ.1,770 (ரூ.1,500 + 18% GST) கட்டணத்தை பயிற்சியின் முதல் நாளன்று செலுத்த வேண்டும்.




மருதமலை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தின் வாயில் எண் 7 அருகில் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் இந்தப் பயிற்சி நடைபெறும்.




மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – 641003 என்ற முகவரியிலோ, 9488518268 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.


Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...