உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவில் நன்கொடை வழங்கும் இடத்தில் முறைகேடு!

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவில் நன்கொடை வழங்கும் இடத்தில் நன்கொடை வழங்குவதற்கு முன்பே ரசீது எடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.200 க்கான நன்கொடைக்கு ரூ.100 மதிப்பிலான ரசீது வழங்கப்படுவதாக பக்தர்கள் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளது.


திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவில் நன்கொடை வழங்கும் இடத்தில் முறைகேடு நடப்பதாக பக்தர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 28ஆம் தேதி நோன்பு சாட்டுதலுன் துவங்கியது. தினமும் கோவில் வளாகத்தில் உள்ள கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.

மேலும் பூவோடு வழிபாடும் நேற்று முன்தினம் துவங்கிய நிலையில் தினமும் ஏராளமானோர் பூவோடு எடுத்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஓலிப்பெருக்கி மூலம் கோவில் பகுதியில் நன்கொடை வழங்குபவர்கள் வழங்க முன்வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே நன்கொடை வழங்கும் இடத்தில் தற்சமயம் பெரும் முறைகேடு நடந்து வருவதாக பக்தர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர். அதாவது ரூ.200 ரூபாய் நன்கொடை வழங்கினால் ரூ.100 ரூபாய்க்கான ரசிது வழங்கி வருகிறார்கள்.

அதாவது, பக்தர்கள் நன்கொடை வழங்கும் நேரத்தில் தான் ரசீது எடுத்து தர வேண்டும் ஆனால் இந்துசமய அறநிலைய ஊழியர்கள் ஏற்கனவே எடுத்து வைத்த ரசீதுகளை கொடுத்து வருகிறார்கள்.



இதுகுறித்து பக்தர்கள் தரப்பில் கேட்டால் கூட்ட நெரிசலில் அப்பொழுது எடுக்க முடியாத காரணத்தால் ஏற்கனவே எடுத்து வைத்துள்ளோம் என அலட்சியமாக பதில் கூறி வருகின்றனர். இது குறித்து புகார் தெரிவிக்க செயல் அலுவலகம் சென்றால் அலுவலகத்தில் யாரும் இருப்பது இல்லை.

ஆகையால் நன்கொடை வழங்கும் இடத்தில் பெரும் முறைகேடு நடந்து வருவதால் மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி உடுமலை மாரியம்மன் கோவில் கல ஆய்வு செய்து தவறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இதனிடையே தேர்த்திருவிழா சமயத்தில் கூட செயல் அலுவலர், அலுவலகத்தில் இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...