பால் விலை உயர்த்தாததைக் கண்டித்து உடுமலையில் விவசாயிகள் நூதன போராட்டம்!

உடுமலையில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. மாடுகளுக்கான உலர் தீவனம், அடர் தீவனம் உள்ளிட்டவற்றின் விலை மிகவும் உயர்ந்துள்ளது. ஆனால் பால் விலை உயர்த்துவதில் அலட்சியம் காட்டப்படுவதை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.


திருப்பூர்: உடுமலையில் பால் விலை உயர்த்தாததைக் கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாள் முழுவதும் பசுவிடமிருந்து பாலைக் கறக்காமல் கன்றுக்கு மட்டும் கொடுத்து நூதன போராட்டத்தை நடத்த விவசாயிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, விவசாயம் சார்ந்த உபதொழிலாக கால்நடை வளர்ப்பு உள்ளது. விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காத போது கால்நடை வளர்ப்பு கைகொடுக்கும். ஆனால் சமீப காலங்களாகக் கால்நடை வளர்ப்பிலும் வருவாய் ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாடுகளுக்கான உலர் தீவனம், அடர் தீவனம் உள்ளிட்டவற்றின் விலை மிகவும் உயர்ந்துள்ளது. ஆனால் பால் விலை உயர்த்துவதில் அலட்சியம் காட்டப்படுகிறது. பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும்.

கறவை மாடுகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும், மானிய விலையில் கால்நடைத் தீவனங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி பாலை ரோட்டில் கொட்டி போராட்டம் என பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். ஆனாலும் பயனில்லாத நிலையே உள்ளது. எனவே அரசுத்துறைகளைப் போல ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

அதன்படி ஒருநாள் மட்டும் மாட்டுப் பாலை கன்றுகளுக்கும், சொந்தப் பயன்பாட்டுக்கும் மட்டுமே பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். அப்போதுதான் விவசாயிகளின் அருமை மற்றவர்களுக்குத் தெரியும். இந்த போராட்டம் பல நாட்கள் தொடர்ந்தால் என்ன ஆகும் என்பதை உணர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...