ராமநவமி ஊர்வல வன்முறை மற்றும் இத்ரீஸ் பாஷா கொலையை கண்டித்து கோவையில் SDPI ஆர்ப்பாட்டம்

வடமாநிலங்களில் ராமநவமி ஊர்வலத்தின் போது நடைபெற்ற வன்முறை தாக்குதலை கண்டித்தும், கர்நாடகாவில் மாடுகளை ஏற்றி சென்ற இத்ரீஸ் பாஷா கொல்லப்பட்டதை கண்டித்தும் கோவையில் SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: வடமாநிலங்களில் ராமநவமி ஊர்வலத்தின் போது நடைபெற்ற வன்முறை தாக்குதலை கண்டித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் பீகாரில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தின் போது இரு மதப் பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. சசாராம் பகுதியில் இரு தரப்பினரும் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர். வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டன.

இந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர். அதையடுத்து மாநிலத்தின் பதற்றமான இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, காவல்துறை கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது.

மேலும் சில தினங்களுக்கு முன் சாந்தனூர் காவல் நிலையம் அருகே மாடுகளை ஏற்றிச்சென்ற போது பசு பாதுகாப்புக்குழு என்ற கும்பல் இத்ரீஸ் பாஷா உட்பட சிலர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் இத்ரீஸ் பாஷா உயிரிழந்தார்.



இந்த இரண்டு சம்பவங்களை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் SDPI கோவை மத்திய மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இச்சம்பவங்களை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...