இரும்பு உருக்காலைக்கு எதிராக பொதுமக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் - தனியரசு ஆதரவு!

பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் இரும்பு உருக்கு ஆலைக்கு எதிராக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை சந்தித்து கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு ஆதரவளித்தார்.


திருப்பூர்: பல்லடம் அருகே கிராம மக்கள் போராட்டத்திற்கு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு ஆதரவு அளித்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் இரும்பு உருக்கு ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைவதாகவும், கால்நடை வளர்ப்பு பாதிக்கப்படுவதாகவும், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சுவாசக் கோளாறு, புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறி அனுப்பட்டி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊருக்குள் பந்தல் அமைத்து 24வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அனுப்பட்டி கிராம மக்கள், நேற்று குழந்தைகள், பெண்கள் உட்பட 21 பேர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

தற்காலிகமாக இரும்பு உருக்கு ஆலையை மூட வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்த நிலையில், நிரந்தரமாக ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்த போராட்டத்திற்கு பல்வேறு விவசாய சங்கங்களும், அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.



இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் போராட்டம் பந்தலுக்கு நேரில் வந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மேலும் கிராம மக்களோடு போராட்ட பந்தலில் அமர்ந்து ஆலையை மூடக்கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தனியரசு பேசியதாவது, அனுப்பட்டி கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களது கோரிக்கையை துறை சார்ந்த அமைச்சர்கள் உடனடியாக பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆலையை மூட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...