அரசு விழாக்களில் கும்மியாட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்..! - கலைஞர்கள் கோரிக்கை

கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான கும்மியாட்டத்தினை கற்றுக் கொள்வதால் மனமும் உடலும் ஒருசேர கட்டுப்பாட்டுடன் இருக்கிறது. கும்மியாட்டக் கலை என்பது போர் பொக்கிஷம். தமிழ்நாடு அரசின் பாரம்பரிய கலைகள் பட்டியலில் கும்மியாட்டம் 70 வது இடத்தில் உள்ளதாக மங்கை வள்ளி கும்மி ஆட்ட குழுவினர் தெரிவித்தனர்.



பல்லடம்: அரசு விழாக்களில் கும்மியாட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கும்மியாட்ட கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கவுண்டம்பாளையம் கிராமத்தில் இன்று மங்கை வள்ளி கும்மி ஆட்ட குழுவினரின் 54ஆவது அரங்கேற்ற விழா நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள்,ஆண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் ஒரே சீருடையில் கும்மியடித்து மகிழ்ந்தனர்.



முருகப்பெருமான் வள்ளியை எப்படி மணம் முடித்தார் என்ற கதையினை 30 பாடங்களாக பிரித்து நான்கு மணி நேரம் பாடலாக படித்து அவர்கள் கும்மிடியத்து நடனமாடினர். ஒரே சீருடையில் 300-க்கும் மேற்பட்டோரின் கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.



கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான கும்மியாட்டத்தினை கற்றுக் கொள்வதால் மனமும் உடலும் ஒருசேர கட்டுப்பாட்டுடன் இருப்பதாகக் கூறிய கும்மியாட்டக் குழுவினர், கும்மியாட்டக் கலை என்பது போர் பொக்கிஷம் எனவும் தமிழ்நாடு அரசின் பாரம்பரிய கலைகள் பட்டியலில் கும்மியாட்டம் 70 வது இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், சுதந்திர தின விழா, குடியரசு தின விழா போன்ற அரசு விழாக்களில் நடைபெறும் அணிவகுப்புகளில் கும்மி ஆட்டத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கும்மியாட்ட குழுவினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Newsletter

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...