கங்கையில் புனித நீராடிய எம்எல்ஏ வானதி சீனிவாசன் - மக்கள் நலனுக்காக கடவுளிடம் பிரார்த்தனை!

பிரதமர் மோடியின் தமிழக வருகைக்குப் பிறகு உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ள பாஜக மகளிரணி தேசிய தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், ரிஷிகேஷியில் உள்ள கங்கை நதியில் நீராடிய புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து அனைவரின் நலனுக்காக பிரார்த்தித்ததாக பதிவிட்டுள்ளார்.


கோவை: கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ரிஷிகேஷில் உள்ள கங்கை நதியில் புனித நீராடிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சட்டமன்றம் முதல் கட்சி நிகழ்ச்சிகள் வரை விறுவிறுப்பாக இயங்கி வருபவர் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு பிறகு ஆன்மிக தலமான உத்தரகண்ட் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி , கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் இந்து குருக்களை சந்தித்து அவர்களுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

அதனை தொடர்ந்து ரிஷிகேஷில் உள்ள கங்கை நதி கரையில் புனித நீராடி அந்த புகைப்படங்களை வானதி சீனிவாசன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில், மக்களின் நன்மைக்காக பிரார்த்தித்துக் கொண்டதாக வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார்.

இந்துக்களின் புனித நதியாக திகழும் கங்கை நதியானது 2,525 கிலோமீட்டர் சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கங்கை கரையில், ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், வாரணாசி, பாட்னா, கொல்கத்தா ஆகிய முக்கிய நகரங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...