கோவை ரேஸ்கோர்ஸில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்..! - மாநகர போலீசார் உறுதி!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில் பொதுமக்களின் குறைகளை கேட்டறியப்பட்டது. அப்போது மக்களின் கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் மற்றும் சாலைகளில் பேரிகாடுகள் அமைக்கப்படும் என மாநகர போலீசார் உறுதி அளித்தனர்.


கோவை: ரேஸ்கோர்ஸ் பகுதியில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என மாநகர காவல் துறை உறுதி அளித்துள்ளது.

கோவை மாநகரம் முழுவதும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் முக்கியமான வீதிகள், குடியிருப்புகளில் போலீசார் கண்காணிப்பை தீவிர படுத்தியதோடு, அப்பகுதி மக்களின் குறைகளையும் கேட்டு நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.



அதன்அடிப்படையில் கோவை ரேஸ்கோர்ஸ் ஜி.டி வீதியில் உள்ள குடியிருப்பில் உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதி குடியிருப்பு மக்களுடன் கலந்துரையாடினர். அப்போது அங்குள்ள பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.



இந்த நிலையில் அப்பகுதி மக்கள் சார்பாக ரேஸ்கோர்ஸ் ரகுநாத்,போலீசாரிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். அதில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், பார்க்கிங் பிரச்சனை உள்ளதால் பார்க்கிங் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி செல்வோருக்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதை அடுத்து பேசிய உதவி ஆணையர் சுரேஷ் குமார் கூறியதாவது, மக்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கண்காணிப்பு கேமராக்கள், பேரிகாடுகள் மூலம் பார்க்கிங் ஏற்பாடுகள் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...