உடுமலை தொழிற்பயிற்சி நிலையத்தில் சுகாதார விழிப்புணர்வு முகாம்!

உடுமலை தொழிற்பயிற்சி நிலையத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு வாழ்வியல் நெறி முறைகள் மற்றும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


திருப்பூர்: உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு முகாமில் தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் வழிகாட்டுதலின் படி உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இன்று உடுமலைப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒரு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



இதில் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவர் ராகவேந்திர சாமி கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு சில வாழ்வியல் நெறி முறைகள் மற்றும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வை வழங்கினார்.



இதில் வட்ட சட்டப்பணிகள் குழு பட்டியல் வழக்கறிஞர்கள் சத்தியவாணி, தம்பி பிரபாகரன் மற்றும் உடுமலைப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையபயிற்சி ஆசிரியர் ரமேஷ், உடற்பயிற்சி ஆசிரியர் சண்முகம் மற்றும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...