திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் - அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பால் பரபரப்பு!

திருப்பூர் மாமன்ற கூட்டத்தில் பேச நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும், கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை எனறும் கூறி அதிமுக உறுப்பினர்கள் மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாமன்ற கூட்டத்தில் பேச நேர ஒதுக்கப்படவில்லை எனக்கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்ட அரங்கில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 121 தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தின் போது வெளியிடப்பட்ட பட்ஜெட் குறித்து அதிமுகவை சேர்ந்த மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி பேசினார். அப்போது, இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பட்ஜெட்டில் அம்மா உணவகத்திற்கும், மாநகராட்சி பள்ளிகளுக்கும் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் குப்பை வரி உயர்த்தப்பட்டதாக ஆட்சேபனை தெரிவித்தார்.



இதற்கு மேயர் பதிலளித்து பேசிக் கொண்டிருந்த போது அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் இந்த வரி உயர்வை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்கிறதா? என்று கேள்வி எழுப்பிய நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கும் அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



இந்நிலையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு மாநகராட்சி மேயர் பேசுவதற்கு உரிய நேரம் வழங்கவில்லை என்றும், அதிமுக மாமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு மாற்றுக் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் பதில் அளிப்பதாக குற்றம் சாட்டி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயரின் இருக்கைக்கு முன்பாக சென்று மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.



இதனால் மாமன்ற கூட்டரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி வெளிநடப்பு செய்தார்.

இதனை தொடர்ந்து பேசிய மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி மாமன்ற கூட்ட மாண்பை மதிக்காமல் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயரின் இருக்கைக்கு முன்பாக வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அனைத்து மாமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் உரிய பதில் வழங்கப்பட்டு வருகிறது.

குப்பை வரி உயர்வு குறித்து மறுபரிசீலனைக்கு தமிழக அரசின் கவனத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு படிப்படியாக தீர்வு காணப்பட்டு வருகிறது, என்றார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...