தாராபுரம் மகா மாரியம்மன் கோவில் திருவிழா - நேர்த்தி கடன் செலுத்திய அமைச்சர் கயல்விழி

தாராபுரத்தில் 150 ஆண்டுகள் பழமையான மகா மாரியம்மன் கோயிலில் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற தீர்த்த குட ஊர்வலத்தில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு தீர்த்த குடம் எடுத்து பக்தர்களுடன் ஊர்வலமாக வந்தார்.



திருப்பூர்: தாராபுரம் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தீர்த்த குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 150 ஆண்டுகள் பழமையான மகா மாரியம்மன் திருக்கோயில் கோவிலின் பங்குனி மாத தீர்த்த திருக்குட திருவிழா ஊர் நாட்டாமை தலைமையில் திமுக நகராட்சி வார்டு உறுப்பினர் புனிதா சக்திவேல் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.



இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பக்தர்களுடன், தானும் தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்.



மலர்களாலும் ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்த மகா மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், நகரத் துணைச் செயலாளர் பிலோமினா, வார்டு பொறுப்பாளர் மணிமாறன், சுப்பையன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...