உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா: சீர் வரிசையுடன் வந்த இஸ்லாமியர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்!

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவிற்காக அம்மனுக்கு சாத்துவதற்கு பட்டுச்சேலை, சீர்வரிசை தட்டுடன் வந்த பூர்வீக பள்ளி ஜமாத்தை சேர்ந்த இஸ்லாமியர்களை பொன்னாடை அணிவித்து வரவேற்ற கோவில் நிர்வாகத்தினர், அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக பட்டுசேலை மற்றும் சீர்வரிசை தட்டுடன் வந்த இஸ்லாமியர்களை கோவில் நிர்வாகத்தினர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.



இந்நிலையில், தேர்திருவிழாவிற்காக உடுமலை நகரமே திருவிழா கோலம் பூண்டு களைகட்டிவரும் நிலையில், உடுமலை பூர்வீக பள்ளி ஜமாத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் உடுமலை நகராட்சி மன்ற தலைவர் மத்தீன் தலைமையில் அம்மனுக்கு சாத்துவதற்காக பட்டுச்சேலை மற்றும் பழங்கள் கொண்ட சீர் வரிசை தட்டுடன் கோவிலுக்கு வந்தனர்.

அப்போது, கோவில் நிர்வாகிகள் அவர்களை பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். பின்னர் அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தனர்

இந்த திருவிழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, பக்தியுடன் வடம் பிடித்து தேர் இழுக்கும் உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழா அனைத்து மத ஒத்துழைப்புடன் அனைவரும் கொண்டாடும் திருவிழாவாக திகழ்ந்து வருகிறது.

அதற்கு காலம் காலமாக தாங்கள் ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் இந்த வருடமும் தேர்திருவிழா சிறப்படைய வாழ்த்துகளை தெரிவிக்க வந்ததாகவும் கோவிலுக்கு வந்த இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.

தேர்திருவிழா சிறக்க வாழ்த்திட வந்த இஸ்லாமியர்களின் செயலும், அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்த நிர்வாகிகளின் அன்பும், மதங்களை கடந்த மத நல்லிணக்கம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...