பல்லடம் அருகே திருமண அலங்கார பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

பல்லடம் அருகே வே.கள்ளிப்பாளையத்தில் ஊருக்கு நடுவே இயங்கும் திருமண அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தால் கடும் பாதிப்பு ஏற்படுவதாகவும், நிறுவனத்தை அப்புறப்படுத்த கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே திருமண அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை அப்புறப்படுத்த கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வே.கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி.



இவருக்கு இரண்டு மகன்களில், சம்பத்குமார் என்பவர் மூளை வளர்ச்சி குன்றியவர் என்பதால் வீட்டிலேயே உள்ளார்.



இவரது வீட்டிற்கு அருகில் சீமான் என்பவர் கண்ணாடி துகள்களை பயன்படுத்தி திருமண அலங்கார பொருட்கள் தயார் செய்யும் கம்பெனி நடத்தி வருவதால், தனது மகனுக்கும், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் சுவாசக் கோளாறு, தோல் வியாதிகள் ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கடந்த நான்கு மாதங்களாக மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், குடியிருப்பு பகுதிக்கு தொழில் செய்ய எந்தவித அனுமதியும் பெறாமல் சட்ட விரோதமாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...