கோவை சிறுமுகையில் பிடிப்பட்ட அரிய வகை நாகப்பாம்பு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையை சேர்ந்த ராஜ்குமார்(48) என்பவர் வீட்டின் உள்ள குடிநீர் தொட்டியில் மறைந்திருந்த 5 அடி நீளமுள்ள அரியவகை நாகப்பாம்பை, பாம்பு பிடி வீரர் காஜாமைதீன் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டார்.


கோவை: சிறுமுகையில் குடிநீர் தொட்டியில் பதுங்கியிருந்த அரியவகை நாகப்பாம்பை பாம்பு பிடி வீரர் பிடித்து வனப்பகுதியில் விட்டார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ரேயான்நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(48). விவசாயியான இவரது வீட்டிற்கு அருகே உள்ள குடிநீர் தொட்டியில் கொடிய விஷமுடைய பாம்பு ஒன்று சுற்றித் திரிந்தது.

இது குறித்து பழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடி வீரரான காஜாமைதீனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து குடிநீர் தொட்டியிலிருந்த 5 அடி நீளமுள்ள அரிய வகை நாகப்பாம்பை லாவகமாக பிடித்தார்.

பின்னர் அந்தப் பாம்பினை சிறுமுகை வனத்துறையினர் அறிவுறுத்தலின்படி, வனப்பகுதியில் விட்டார். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பாம்பு பிடி வீரரால் பிடிபட்ட நாகம், அரியவகை பொறி நாகம். இது மிகவும் கொடிய விஷத்தன்மை கொண்டது, என்றனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...