தாராபுரத்தில் சின்ன காளியம்மன் கோவிலில் சாமி சிலை திருட்டு - போலீசார் விசாரணை!

தாராபுரம் சின்ன காளியம்மன் கோவிலில் சாமி சிலையை மர்மநபர்கள் இரவில் திருடிச் சென்றனர். சிசிடிவி காட்சியில் இரண்டு நபர்கள், இரவு நேரத்தில் சிலையை திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் அடிப்படையில் தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



தாராபுரம்: தாராபுரத்தில் சின்ன காளியம்மன் கோவிலில் சாமி சிலை திருடு போன சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தென்தாரை பீமராயர் அக்ரஹரர் பகுதியில் ஸ்ரீ சின்ன காளியம்மன் திருக்கோயில் உள்ளது.



இந்த கோவிலின் வெளி பிரகாரத்தில் மூன்று திசைகளிலும்ஸ்ரீ இந்திராணி தேவி மகேஸ்வரி தேவி வைஷ்ணவி தேவி ஆகியோரது கற்சிலைகள் சுவரில் வைக்கப்பட்டிருந்தன.

நேற்று இரவு கோவில் பூசாரி பிரவீன் குமார் வழக்கம்போல பூஜைகளை முடித்துவிட்டு இரவு 9 மணி அளவில் கோவில் நடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.



இன்று காலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது வெளிப்பிரகார சுவரில் இருந்த ஸ்ரீ இந்திராணி தேவியின் சிலையை மட்டும் மர்ம நபர்கள் பீடத்துடன் திருடி சென்று விட்டனர்.

சம்பவம் குறித்து தாராபுரம் போலீசில் பூசாரி பிரவீன் குமார் புகார் செய்ததை அடுத்து தாராபுரம் குற்றப் பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில், பொதுமக்களின் நடமாட்டம் இருந்த இரவு 9:46 மணியளவில் ஸ்கூட்டர் ஒன்றில் வந்த மர்ம நபர் கோவிலை சுற்று சுற்றி வந்ததாகவும் கோவில் திறந்திருந்த பொழுது சிவப்பு உடை அணிந்த ஒரு மர்ம நபர் கோவிலின் உள்பிரகாரத்தில் ஒளிந்து கொண்டு கோவிலின் நடை சாத்திய பின் ஸ்ரீ இந்திராணி சிலையை பீடத்துடன் பெயர்த்து எடுத்து வெளியே நின்று இருந்த நபரிடம் கொடுத்த சம்பவமும் பதிவாகியுள்ளது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் சிலையை திருடி சென்ற நபர்களை தேடி வருகின்றனர்

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...