உடுமலை மாரியம்மன் கோவில் நன்கொடை பெறுவதில் முறைகேடு - தூக்கத்தில் நடந்த தவறு என அதிகாரி விளக்கம்!

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நன்கொடை வழங்கும் இடத்தில் ரூ.200 நன்கொடை வழங்கினால் ரூ.100க்கான ரசீது வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இரவு பகலாக ஊழியர்கள் உறக்கமின்றி வேலை செய்ததால் தவறு நிகழ்ந்து விட்டதாக செயல் அலுவலர் சினிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.


திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நன்கொடை பெறுவதில் நடைபெற்ற தவறு தூக்கத்தில் நிகழ்ந்ததாக அதிகாரி விளக்கம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 28ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கிய நிலையில் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு நன்கொடை வழங்கும் இடத்தில் ரூ.200 நன்கொடை வழங்கினால் ரூ.100க்கான ரசீது வழங்கப்பட்டு முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.



இதுதொடர்பாக உடுமலை இந்து சாம்ராஜ்யம் நிறுவனத் தலைவர் சக்திவேல் தலைமையில் செயல் அலுவலர் சினிவாசனிடம், இதுகுறித்து நேரில் விளக்கம் கேட்கப்பட்டது.

அப்பொழுது பேசிய அவர், இரவு பகலாக ஊழியர்கள் பணியாற்றி வருவதால் தூக்க கலக்கத்தில் சிறு தவறு ஏற்பட்டு விட்டது. இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இனி பார்த்துக் கொள்ளப்படும் என்று புது விளக்கம் அளித்துள்ளார்.

தூக்கத்தில் இருந்த காரணத்தால் தவறு ஏற்பட்டு விட்டது என செயல் அலுவலர் சினிவாசன் விளக்கம் ஏற்கக் கூடியது அல்ல. உரிய விசாரணை நடத்த வேண்டும் என பக்தர்கள் தரப்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...