தண்ணீர் தொட்டியில் விழுந்த 2 கட்டுவிரியன் பாம்புகள் - பத்திரமாக மீட்ட இயற்கை ஆர்வலர்!

தாராபுரம் அருகேயுள்ள மூலனூரில் விவசாய தோட்டத்தில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த 5 அடி நீளம் கொண்ட 2 கட்டுவிரியன் பாம்புகளை இயற்கை ஆர்வலர் அன்பரசு பத்திரமாக பிடித்து மற்றொரு கிணற்றில் பாதுகாப்பாக விட்டனர்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த மூலனூர் அருகே விவசாய தோட்டத்தில் தண்ணீர் தொட்டியில் இருந்த 5 அடி நீளமுள்ள 2 கட்டுவிரியன் பாம்புகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.

மூலனூர் அருகே உள்ள இடைக்கல்படி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராணி. இவரது விவசாய தோட்டத்தில் சுமார் 8 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டி உள்ளது.

இந்த தண்ணீர் தொட்டியில் 5 அடி நீளம் உள்ள அதிக விஷத்தன்மை கொண்ட இரண்டு கட்டுவிரியன் பாம்புகள் இரவு நேரத்தில் தண்ணீர் தொட்டியில் விழுந்து கிடந்துள்ளது. தண்ணீர் தொட்டியில் சுமார் 2 அடி அளவு தண்ணீர் இருந்ததால் மேலே வர முடியாமல் இரண்டு பாம்புகளும் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.



இதனையடுத்து செல்வராணி அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் அன்பரசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த இயற்கை ஆர்வலர் அன்பரசு மற்றும் அவரது நண்பர்கள் நேரில் சென்று இரண்டு பாம்புகளையும் தண்ணீர் தொட்டியில் இருந்து உயிருடன் மீட்டனர்.

மேலும் அவற்றை அருகே இருந்த பாழடைந்த கிணற்று பகுதியில் உயிருடன் பாதுகாப்பாக விட்டனர்.

Newsletter

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...