தொண்டாமுத்தூர் அருகே வட மாநில இளைஞருக்கு கத்திக்குத்து - சிறுவன் உட்பட மூவர் கைது!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஹிபுல் உசேன் என்பவர் நேற்றிரவு தொண்டாமுத்தூர் சாலையில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் அவரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயன்றனர். சிறுவன் உட்பட இருவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற வட மாநில இளைஞரை கத்தியால் குத்திய சிறுவன் உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அசாம் மாநிலம் பிரம்மாபிலைசேர்ந்தவர் ரஹிபுல் உசேன் (21). இவர் கோவை தொண்டாமுத்தூர் குபேரபுரி பகுதியில் தனது சகோதரருடன் தங்கி டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு ரஹிபுல் உசேன் தனது சகோதரர் முகமது பைசலுடன் கடைக்குச் சென்று மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு மீண்டும் அறைக்குச் செல்ல சாலையில் நடந்து சென்றனர்.

அப்போது மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மூன்று பேர் ரஹிபுல் உசேனிடம் தகராறு செய்து, அவதூறாக பேசி தாக்கியுள்ளனர்.

அப்போது சந்துரு என்ற இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஹிபுல் உசேனை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவர் மயங்கி விழுந்ததை தொடர்ந்து 3 பேரும் தப்பியோடியுள்ளனர்.



இதையடுத்து அங்கிருந்தவர்கள் வட மாநில தொழிலாளியை கத்தியால் குத்திய ஆலாந்துறையை சேர்ந்த சந்துரு (19), மற்றும் 16 வயது சிறுவனை மடக்கி பிடித்து தொண்டாமுத்தூர் போலீசில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து காயமடைந்த ரஹிபுல் உசேன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற தொண்டாமுத்தூரை சேர்ந்த அருண்குமார் (20) என்பவரையும், போலீசார் மடக்கி பிடித்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்துரு மீது பள்ளி மாணவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...