வால்பாறை அருகே வனத்துறை பயிற்சி மையத்தில் கலந்தாய்வு கூட்டம்

வால்பாறை அட்டக்கட்டி பயிற்சி மையத்தில் வனத்துறை, மின்சார துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வனவிலங்குகள் உயிரிழப்பை தடுப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



கோவை: வால்பாறையில் வனவிலங்கு உயிரிழப்பை தடுப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம் பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி ஆகிய நான்கு வனச் சரகத்திற்கு உட்பட்ட வனத்துறையினர், மின்சார துறையினர், வருவாய்த்துறையினர், காவல் துறையினர் இணைந்து அட்டகட்டி பயிற்சி மையத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.



இக்கூட்டத்தில் மின்சாரம் தாக்கி யானைகள் மற்றும் வனவிலங்குகள் உயிரிழப்பதை எவ்வாறு தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.



இதில் மின் வாரியத்திற்கு தகவல் அளிக்காமல் விவசாய நிலங்களுக்கு மின் வேலி அமைப்பதை தடுக்கவும், மின் வேலியினால் வனவிலங்குகள் இறந்தால் 1972 வன சட்டப்படி 3 முதல் 7 ஆண்டுகள் கடும் காவல் தண்டனை வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...