கோவையில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

கோவை நீதிமன்ற வளாகத்தில் கவிதா என்ற பெண் மீது அவரது கணவர் கடந்த மார்ச் 23ஆம் தேதி ஆசிட் வீசியதில் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு உத்தரவிட்டுள்ளது.


கோவை: நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீச்சால் படுகாயமடைந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோவை நீதிமன்ற வளாகத்தில் கடந்த மார்ச் 23ஆம் தேதி விசாரணைக்கு வந்த கவிதா என்பவர் மீது அவரது கணவர், ஆசிட் வீசியதில் படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கோவை பந்தைய சாலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரித்த கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு நீதிபதி சிவா, தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீடு திட்டத்தின் படி இடைக்கால இழப்பீடு நிவாரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...