கோவை நாயக்கன்பாளையம் அருகே அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள் - பரபரப்பு

கோவை பெரியநாயக்கம் பாளையம் வழியாக இயக்கப்படும் அரசு பேருந்தை சரிவர இயக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்திப்ரியா தலைமையில் அந்த பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: நாயக்கன்பாளையம் வழியாக பேருந்து இயக்காததைக் கண்டித்து பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள நாயக்கன்பாளையம் ஊராட்சியில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் மலைப்பகுதியான பாலமலை பகுதியில் மட்டும் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் உள்ளனர்.

இவர்களுக்காக கோவையிலிருந்து பெரியநாயக்கன்பாளையம் வழியாக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல மேட்டுப்பாளையத்திலிருந்து காரமடை, பெரியநாயக்கன்பாளையம் வழியாகவும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மேட்டுப்பாளையத்திலிருந்து வரும் எண்.2 கொண்ட அரசு பேருந்து சரியாக வரவில்லை. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிப்புக்குள்ளாக்கினர். இதுகுறித்து பொதுமக்கள் நாயக்கன்பாளையம் ஊராட்சித்தலைவர் சாந்திப்ரியாவிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.



இதனையடுத்து அவர் தலைமையில் மேட்டுப்பாளையம் அரசு பேருந்து கழக கிளை மேலாளருக்கு மனு அளித்தும், பேருந்து சரியாக வராததால் இன்று காலை 10.30 மணியளவில் பேருந்தை ஊராட்சித்தலைவர் தலைமையில் பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிளை மேலாளர் பிரகாஷ் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் தாமோதரன் அங்கிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட பேருந்து விடுவிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...