கோவையில் முதல்வர் புகைப்பட கண்காட்சியில் நோன்பு திறந்த இஸ்லாமியர்கள்!

கோவை வஉசி மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு குறித்த "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" கண்காட்சியை காணவந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் மைதானத்தில் நோன்பு திறந்தனர்.



கோவை: முதல்வர் புகைப்பட கண்காட்சியில் இஸ்லாமியர்கள் நோன்பு திறந்தனர்.

கோவை வஉசி மைதானத்தில், "எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை" என்ற புகைப்பட கண்காட்சி கடந்த 7ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த கண்காட்சியை தினமும் ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்து வருகின்றனர். தினமும் மாலையில் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், இந்த கண்காட்சியை காண, திமுக வடக்கு மாவட்டம் கரும்புக்கடை பகுதி கழக செயலாளர் ஜெய்லாப்தீன் இஸ்லாமிய மக்களை அழைத்து வந்தார்.



புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட இஸ்லாமியர்கள், நோன்பு காலத்தையொட்டி, வஉசி மைதானத்திலேயே இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் நோன்பு திறந்தனர்.

இதைத் தொடர்ந்து புகைப்பட கண்காட்சி வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள், மேஜிக் ஷோ ஆகியவை நடைபெற்றது.



இந்த நிகழ்வுகளில் திமுக மாவட்டச் செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல தலைவர் தமிழ்மறை, மாவட்ட பொருளாளர் ரகுமான் மற்றும் பகுதி கழக செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...