கோவையில் மாரடைப்பு குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான்

கோவையில் தனியார் மருத்துவமனை சார்பில் மாரடைப்பு குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சியில், புகை இதயத்திற்கு பகை, உணவே மருந்து, சக்கரையை கட்டுப்படுத்துங்கள் இதயத்தை பாதுகாக்கலாம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நடைபயணம் மேற்கொண்டனர்.


கோவை: கோவையில் தனியார் மருத்துவமனை சார்பில் மாரடைப்பு குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.

அண்மைக்காலமாக மக்களுக்கு இருதயம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. முன்பெல்லாம் வயது அதிகமானவர்களுக்கு மட்டும் இருதய கோளாறு ஏற்பட்டுவந்த நிலையில், தற்போது சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை பலரும் இருதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக திடீர் மாரடைப்பால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் (கே.ஜி) மருத்துவமனை சார்பில் வாக்கத்தான் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.



இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியை கேஜி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவச்சலம் கொடியசைத்து துவக்கி வைத்தார். மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய இந்த நடைபயணம் நீதிமன்றம், தெற்கு வட்டாட்சியர் அலுவலக சாலை வழியே நடைபெற்றது.

இதில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டு உயர் ரத்த அழுத்தம் ஆபத்தானது, ஹார்ட் ஃபெயிலியர் என்பது மாரடைப்பல்ல, புகை இதயத்திற்கு பகை, உணவே மருந்து, சக்கரையை கட்டுப்படுத்துங்கள் இதயத்தை பாதுகாக்கலாம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நடைபயணம் மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர் .

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...