திருப்பூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் விதிமீறல் - துணைமேயர் ஆய்வு

மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம், திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் திடீர் ஆய்வு செய்தார். விதிமுறைகளை மீறிய கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.



திருப்பூர்: திருப்பூர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையமானது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ 38 கோடியே 81 லட்சம் மதிப்பில் கடந்தாண்டு புதுப் பொலிவுடன் கட்டப்பட்டது.

தற்போது, பழைய பேருந்து நிலையத்தில் செல்போன் கடைகள், பேக்கரிகள், உணவகங்கள், என 80க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, அக்கடைக்காரர்கள் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகளின் வெளியிலேயே பொருட்களை வைத்தும்,ஒரு சில கடைக்காரர்கள்அனுமதியின்றி நடைபாதைகளில் கடைகள் அமைத்தும்,கடைகளின் சுவர்களை இடித்து தனியாக ஒரு அறையும் அமைத்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் வந்தது.



இதைத்தொடர்ந்து, மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை திடீர் ஆய்வு செய்தார்.



அப்போது, விதிமுறைகளை மீறி பெரும்பாலான கடைகள், பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகள் அமைத்திருந்ததும், அதேபோல் மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதியும் பெறாமல் கடைகளை இடித்து தனியாக ஒரு அறை அமைத்து இருந்ததும் தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளரிடம் ஆலோசனை மேற்கொண்டு, விதிமுறைகளை மீறிய கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணைமேயர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...