தாராபுரம் அருகே இரவு நேரங்களில் மரங்களை வெட்டிக் கடத்தும் மர்ம கும்பல்!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றுப்படுகையில் வளர்க்கப்பட்டு வந்த 7 லட்சம் மதிப்பிலான மரங்களை வெட்டி கடத்திய கும்பலைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஓடும் அமராவதி ஆறு, தாராபுரம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கு உயிர் நாடியாக இருந்துவருகிறது.

இந்த ஆற்றின் கரையோர பகுதியில் இருபுறமும் வேம்பு, தீக்குச்சி மரம், புளியமரம், சவுக்கு, தேக்கு மரம் உள்ளிட்ட மரங்களை வனத்துறையினர் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

இந்த நிலையில், அலங்கியம் கூடுதுறை பகுதியில் புறம்போக்கு நிலத்தில் உள்ள விலை உயர்ந்த மரங்களை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் வெட்டி லாரிகள் மூலம் கடத்திச் சென்று விட்டனர்.

இந்த சம்பவம், கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடந்த நிலையில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் மர்ம நபர்களால் வெட்டி கடத்தப்பட்ட மரங்களின் மதிப்பு ரூ.7 லட்சம் வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மரங்களை வெட்டி கடத்தி சென்ற கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...