பல்லடம் அருகே பெண்ணை தாக்கிய ஊராட்சித் தலைவர் - போலீசார் விசாரணை

பல்லடம் அருகே சொத்து பிரச்னையால் ஏற்பட்ட முன்விரோதத்தால் பெண் ஒருவரை , பருவாய் ஊராட்சித் தலைவர் ரவிச்சந்திரன் இரும்புக் கம்பியால் தாக்கியதில், படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கோவை: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். விவசாயியான அருண்குமார் 25 மாடுகள், கோழிப்பண்ணை வைத்து வளர்த்து வருகிறார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அருண்குமார் வளர்த்து வரும் மாடுகள் திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டு சோர்வுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.



நேற்று முன்தினம் ஒரு மாடு மட்டும் திடீரென இறந்துள்ளது. இது குறித்து, கால்நடை மருத்துவரை வரவழைத்து பரிசோதனை செய்த, அருண்குமார் மாடுகள் உட்கொள்ளும் புண்ணாக்கில் யாரோ விஷம் கலந்து இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இரண்டு வருடங்களாக அருண்குமாருக்கும் அவரது அக்கா மற்றும் அருண்குமாரின் மைத்துனரும் பருவாய் ஊராட்சி மன்ற தலைவருமான ரவிச்சந்திரன் ஆகியோருக்கு இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அருண்குமாரின் வீட்டுக்கு திடீரென வந்த பருவாய் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், அருண்குமாரின் மனைவி கவிதாவை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த கவிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கவிதா பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் குறித்து கவிதா அளித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.



இது குறித்து கவிதா கூறுகையில், எங்களது வாழ்வாதாரமே மாடுகளை நம்பி தான் உள்ளது. 25 மாடுகளை கொல்வதற்கு விஷம் வைத்தது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் மீது சந்தேகம் உள்ளது. மாடுகள் இறந்தது தொடர்பாகத்தான் பேச வருகிறார் என நினைத்தேன்.

என்னை இரும்பு கம்பியால் ஊராட்சி தலைவர் தாக்கினார். பருவாய் கிராமத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. தாக்குதலில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...