கோவையிலிருந்து மதுரைக்கு சென்ற அரசு பேருந்து நடத்துநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் பரபரப்பு!

கோவையிலிருந்து மதுரைக்கு சென்ற அரசுப் பேருந்து பல்லடம் பேருந்து நிலையம் அருகே வந்த போது பணியில் இருந்த நடத்துநர் சீனி என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், பயணிகள் உதவியுடன் அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


திருப்பூர்: கோவையிலிருந்து மதுரைக்கு சென்ற அரசுப் பேருந்து நடத்துநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், பயணிகள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த ராம்ராஜ் என்ற அரசுப் பேருந்து ஓட்டுநரும், மதுரையை சேர்ந்த பேருந்து நடத்துநர் சீனி என்பவரும் இன்று காலை மதுரை புறநகர் பேருந்து பணிமனையிலிருந்து கோவைக்கு வந்துள்ளனர். மீண்டும் கோவையிலிருந்து மதுரை நோக்கி பயணிகளுடன் சென்ற போது, பல்லடம் பேருந்து நிலையம் அருகே நடத்துநர் சீனிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.



இதைக் கண்ட ஓட்டுநர் ராமராஜ் மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உடனடியாக பேருந்தை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



பல்லடம் அரசு மருத்துவமனையில் நடத்துநர் சீனி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து ஓட்டுநர் ராமராஜிடம் விசாரித்த போது, நடத்துநர் சீனி கடந்த வாரம் முழுவதும் டெல்லியிலிருந்ததாகவும் நேற்று மதுரை திரும்பிய நிலையில், ஒரு நாள் விடுப்பு கேட்டதாகவும், பணிமனை மேலாளர் விடுப்பு அளிக்க மறுத்ததால் சீனி பணிக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

காலை முதலே நடத்துநர் சீனி மிகுந்த சோர்வுடன் காணப்பட்டதாகவும், திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சரியான நேரத்தில் பேருந்து ஓட்டுநர் ராமராஜ், நடத்துநர் சீனியை பயணிகளோடு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்ததால் சீனி உயிர் பிழைத்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் நடத்துநர் சீனியை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...