கிணத்துக்கடவு அருகே திமுக ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் - பொதுமக்கள் முற்றுகை!

கிணத்துக்கடவு அருகே கிராவல் மண் கடத்தலை தடுக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமாரை தாக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கிணத்துக்கடவில் திமுக ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய நபர்களை கைது செய்ய கோரி கிணத்துக்கடவு காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் உட்பட்ட நம்பர் 10 முத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்றிரவு அனுமதியின்றி கிராவல் மணல் லாரியில் கொண்டு செல்வதாக ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சதீஷ்குமார் லாரியை தடுத்து நிறுத்தியுள்ளார். இதில் இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த ஒரு தரப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில், காயம் அடைந்த ஊராட்சி மன்ற தலைவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய நபர்களை கைது செய்ய கோரி நம்பர் 10 முத்தூர் பகுதி சேர்ந்த கிராம மக்கள் கிணத்துக்கடவு காவல் நிலையத்தை திடீரென முற்றறுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்னர், அங்கிருந்த காவல்துறையினர் முற்றுகையிட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

பின்னர் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியதாக கிணத்துக்கடவு சிங்கையன்புதூர் பகுதி சேர்ந்த காளிமுத்து, மயில் மாணிக்கம், கைலாசம், ஈஸ்வரன், சாந்தலிங்கம் ஆகிய ஐந்து பேரும் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதில், காளிமுத்து, மயில் மாணிக்கம், கைலாசம் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஈஸ்வரன், சாந்தலிங்கத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...