துடியலூர் அருகே குப்பைக்கிடங்கில் திடீர் தீ விபத்து - 3 மணி நேரம் போராடி தீ அணைப்பு!

துடியலூர் அடுத்த அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் புகை மூட்டம் காரணமாக அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. தீயணைப்புத்துறையினர் 3 மணி நேர போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகேயுள்ள குப்பைக்கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதுமாக புகை மூட்டமாக காட்சியளித்தது.

துடியலூரை அடுத்துள்ள அசோகபுரம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள ரயில்வே பாலம் அருகில் கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இங்கு குப்பைகள் மலை போல் குவிந்துள்ளன.

இங்கு அடிக்கடி மர்ம நபர்கள் குப்பைகளுக்கு தீ வைத்து விடுவதால் தீ விபத்து ஏற்படுவது, தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை இங்குள்ள குப்பைகளில் இருந்து புகை வந்துள்ளது.



தொடர்ந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திறணல் ஏற்பட்டுள்ளது.



தொடர்ந்து கவுண்டம்பாளையத்தில் உள்ள கோவை வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Newsletter

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...