கோவை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த குட்டி யானை!

கோவை அடுத்த நாயக்கன்பாளையம் பகுதியில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குட்டி யானை ஒன்று உயிரிழந்த நிலையில், வனத்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் தொட்டியை உடைத்து குட்டி யானையை மீட்டு உடற்கூறாய்வு செய்து புதைத்தனர்.



கோவை: கோவை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து குட்டி யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை பெரிய நாயக்கன்பாளையம் வனத்துறைக்கு உட்பட்ட பாலமலை செல்லும் வழியில் நாயக்கன் பாளையம் கிராமம் உள்ளது அந்த கிராமப் பகுதியில் நடிகர் சத்யராஜின் தங்கை அபராஜிதா என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டின் வெளியே கீழ்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது.

இந்த தொட்டியில் வனப் பகுதியில் உள்ள யானைகள் அவ்வப்போது வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில், அதுபோல 3 நாட்களுக்கு முன்பு தண்ணீர் குடிக்க வந்த இளம் வயது உடைய ஒரு குட்டி யானை ஒன்று அந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மண்டல உதவி வன பாதுகாவலர் செந்தில்குமார், பெரிய நாயக்கன்பாளையம் வன அலுவலர் செல்வராஜ் உள்ளிட்ட வன அலுவலர்கள், மருத்துவர் சுகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர்.

இதனையடுத்து, இறந்த யானையை மீட்க முயன்ற போது, 11 யானைகள் அடங்கிய கூட்டம் அங்கு வந்தது. மேலும் இரவு என்பதால் உடனடியாக இறந்த யானையை மீட்க முடியவில்லை.



இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் இறந்த யானையை எடுக்க பொக்லைன் எந்திரம் மூலம் தண்ணீர் தொட்டியை உடைத்து வலை மூலம் இறந்த குட்டி யானையை மீட்டனர்.



அதன்பிறகு குட்டி யானையை பொக்லைன் எந்திரத்தில் போட்டு அங்கிருந்து வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.



அங்கு யானையை உடற்கூறு ஆய்வு மேற்கொண்டு யானையின் உடலை புதைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...