சமூக வலைத்தளத்தில் அவதூறு, வன்முறையை தூண்டும் வகையில் பதிவு - கோவையில் பாஜக நிர்வாகி கைது!

மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறாகவும், வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்த பாஜக தொழில் பிரிவு மாநில துணை தலைவர் செல்வகுமாரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: சமூகவலைதளங்களில் அவதூறாகவும், வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டு வந்த பாஜக தொழில் பிரிவு மாநில துணை தலைவர் செல்வகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாநகரில் சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிடும் நபர்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக தொழில்துறை பிரிவு துணை தலைவர் செல்வகுமார், மின்சாரத்துறை அமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், இரு பிரிவினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாஜக தொழில் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செல்வகுமாரை இன்று கைது செய்தனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மீது ஏற்கனவே 2022ஆண்டில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்று வெளியே இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது, செல்வகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகள் மற்றும் பதில் பதிவுகள் (Retweet) ஆகியவை பல்வேறு பிரச்சனைகளை தூண்டும் வகையில் உள்ளது

இதுதொடர்பாக போலீசாருக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த காரணத்தால் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு உள்ளது. மேலும் செல்வகுமார் மீது கரூர் மாவட்டத்தில் மோசடி வழக்கு ஒன்று உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...