கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய ஆலோசனை கூட்டம்!

கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் ஒன்றிய ஆலோசனை கூட்டத்தில், மாவீரன் தீரன் சின்னமலையின் 267வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



கோவை மேற்கு மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தீரன் K.S.குழந்தைவேலு மற்றும் மாவட்ட பொருளாளர் தீரன். M.S.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,

1.கோவை மேற்கு மாவட்ட மற்றும் ஒன்றிய (பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், S.S.குளம் ஒன்றியம்) வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி மாவீரன் தீரன் சின்னமலையின் 267வது பிறந்தநாள் விழா பொதுச்செயலாளர் தலைமையில் சென்னையில் நடைபெற உள்ளது. இதில், கோவை மாவட்டம் சார்பாக சிறப்பாக கலந்து கொள்ள வேண்டும்.

2.ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி மாவீரன் தீரன் சின்னமலையின் 267வது பிறந்தநாள் விழா முடித்தவுடன் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதால் பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் கொங்கு சொந்தங்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் தீரன்.E.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட விவசாய அணி செயலாளர் தீரன் மருதாச்சலம், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் தீரன் வேலு, மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் தீரன் வரதராஜன், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய துணை செயலாளர் தீரன் பொன்னுசாமி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் தீரன் கொய்யா மரத்தோட்டம் மணி, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி நகர செயலாளர் தீரன்.பாலு (எ) பாலகிருஷ்ணன், பெரியநாயக்கன் பாளையம் KMDK ஒன்றிய பொறுப்பாளர்கள் தீரன்.கணேசன், ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஒன்றிய துணை செயலாளர் தீரன்.பொன்னுசாமி நன்றியுரை கூறினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...