கேரளாவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கோவை கரும்புகடை பகுதியிலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற வேலுமணி என்பவரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து 1டன் ரேஷன் அரிசி மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கோவை கரும்புக்கடை திப்புநகர் பகுதியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதியில் ஒருவர் பைக்கில் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்துள்ளார். இதைக்கண்ட போலீசார் அந்த நபரை பிடித்து மூட்டைகளை ஆய்வு செய்ததில், அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், பிடிபட்ட நபர் போத்தனூர் அன்புநகர் பகுதியை வேலுமணி என்பதும், கரும்புக்கடை சாரைமேடு பகுதியை சேர்ந்த அஜீஸ் என்பருடன் சேர்ந்து கோவையில் பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி, அதனை கேரளாவிற்கு கடத்தி அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து வேலுமணியை கைது செய்த போலீசார், அதே பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான அவரது கூட்டாளியான அஜீஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...