இடவிற்பனைப் பத்திரம் ரத்து விவகாரம் - பதிவாளரைக் கண்டித்து கோவையில் உண்ணாவிரதம்!

கோவை கணபதி பகுதியில் இட விற்பனைப் பத்திரத்தை முறையான விசாரணை நடத்தாமல் ரத்து செய்த பதிவாளரைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். நியாயம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: கோவையில் போலி ஆவணம் உருவாக்கி இட விற்பனை நடைபெற்றதாக ராஜாராம் என்பவர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட பதிவாளர் அது தொடர்பான இடப்பத்திரங்களை ரத்து செய்தார்.



இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவை கணபதி பகுதியில் உள்ள சி.எம் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.



இதுகுறித்து பேசிய அப்பகுதி மக்கள், எங்கள் பெயரில் உள்ள அனைத்து விற்பனை பத்திரங்களையும் ரத்து செய்யக்கோரி ராஜாராம் என்பவர் புகார் அளித்துள்ளதாக மாவட்ட பதிவாளரிடம் இருந்து கடிதம் வந்தது. அக்கடிதத்தில் சிஎம் ராஜூ என்பவர் போலி ஆவணம் உருவாக்கியதாகவும் அதிலிருந்து அடுத்தடுத்த ஆவணங்கள் உருவாக்கப்பட்டதாகவும் ராஜாராம் கூறுகிறார்.

அவர் காளீஸ்வரன் மற்றும் குமாரசாமி என்பவர்களிடமிருந்து கடந்த 1997 ஆம் ஆண்டு சொத்துக்களை வாங்கியதாகவும், அவர் வாங்கிய சொத்துக்கள் எங்களுக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாகவும் புகார் தெரிவிக்கிறார்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட பதிவாளர் எங்களுக்கு முழு அவகாசம் வழங்காமல், தீர விசாரிக்காமல் எங்களுக்கு எதுவும் தெரிவிக்காமல், எங்கள் பெயரில் உள்ள விற்பனை பத்திரங்கள் அனைத்தையும் ரத்து செய்ததோடு மட்டுமின்றி, மூல பத்திரங்களையும் அவசர அவசரமாக ரத்து செய்துள்ளார். அவர் எங்களை அழைத்து கருத்து எதுவும் கேட்காமல் ஒருதலைபட்சமாக செயல்பட்டு உள்ளதால் இங்குள்ள அனைவரும் மன வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

மாவட்ட பதிவாளர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை பத்திரப்பதிவுத்துறையில் மேல்முறையீடு செய்துள்ளோம். அந்த விசாரணை நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், ராஜாராம் சில ஆட்களை அனுப்பி சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை அபகரிக்கும் செயலை செய்து வருகிறார்.

காளீஸ்வரன் மற்றும் குமாரசாமி ஆகியோர் ராஜாராமுக்கு சொத்தை விற்றபொழுது, அவருக்கு அதில் எவ்வித உரிமையும் இல்லை என்பதற்கான ஆதாரங்களும் தங்களிடம் உள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...