தாராபுரத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா - அழகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையிலிருந்து பூவோடு எடுத்தும், அழகு குத்தியும் நேர்த்திக் கடனாக, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, தேவேந்திர தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர்.



தாராபுரம்: தாராபுரம் மகா மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவில், பக்தர்கள் அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேவேந்திர தெருவில் உள்ளது பழமை வாய்ந்த மகா மாரியம்மன் திருக்கோவில். இந்தத் திருக்கோவிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கம்பம் எடுத்துவந்து பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு நடத்தினர்.



இந்த நிலையில், தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையிலிருந்து தேவேந்திர தெருவை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் பூவோடு எடுத்தும், பெண்கள் அழகு குத்தியும் அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில் பெண்கள் ஆண்கள் என இருவரும் சுமார் 10 அடி நீளம் வேலை அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.



பக்தர்கள் அமராவதி ஆற்றங்கரையிலிருந்து பூவோடு எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக் கடனாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று தேவேந்திர தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அப்போது ஒரு தம்பதியினர் கரும்பில் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மாரியம்மனை வழிபட்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...