கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு!

சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உட்பட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவுள்ளது. அம்பேத்கர் பிறந்த தினத்தை சமத்துவ நாளாக கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து அரசு அலுவலகங்களிலும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று சமத்துவ நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு உறுதிமொழி எடுத்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார்பாடி தலைமையில் அரசு அலுவலர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



முன்னதாக அம்பேத்கர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், தமிழ்நாடு விசாயிகள் சங்க தலைவர் பழனிச்சாமி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...