கோவை அரசு கல்லூரியில் அரசியல் சார் அறிவியல் துறை மன்ற விழா

கோவை அரசு கலைக்கல்லூரியில் அரசியல் சார் அறிவியல்துறை மன்றவிழா தொடங்கியுள்ளது. அதில் மாணவர்கள் உருவாக்கிய நம்பிக்கை பூங்காவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார்.


கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் செயல்பட்டு வரும் அரசியல் சார் அறிவியல் துறை சார்பில் மன்ற விழா கல்லூரி வளாகத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.



இதில் மாணவர்கள் உருவாக்கிய பூங்காவில் மரக்கன்றுகள் நடவு செய்யபட்டது. இதனைத் தொடர்ந்து, கல்லூரி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்துக் கொண்டார்.



பின்னர் அவர் மாணவர்களிடையே பேசுகையில், மாணவர்கள் அனைவரும் குறிக்கோளை நோக்கியே பயணிக்க வேண்டும். வரும் காலங்களில் மத்திய மாநில அரசுகளில் வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளது. கல்லூரி வாழ்க்கையில் உங்கள் தனித்திறனை வளர்த்துக் கொள்வது அவசியம்.

இங்கு கற்றுக்கொள்ளும் தனித்திறமைகள் உங்கள் வாழ்வில் நிச்சயம் உதவும், என்றார்.

பின்னர் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் கல்லூரி முதல்வர் உலகி, அரசியல் சார் அறிவியல் துறை தலைவர் கனகராஜ், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...