திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஊழியர்களை அதிகப்படுத்துக..! - மாதர் சங்கத்தினர் கோரிக்கை

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் தொகைக்கேற்ப ஊழியர்களை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அடுத்த கட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆய்வு குழுவினர் தெரிவித்தனர்.



திருப்பூர்: மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊழியர்கள் அதிகப்படுத்த மாதர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், 36 பேர் கொண்ட குழுவினர் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்கள் சந்தித்து குழுவினர் கூறியதாவது:



திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது உள்ள மக்கள் தொகைக்கேற்ப ஊழியர்களை அதிகப்படுத்த வேண்டும். அதிக நோயாளிகள் வரக்கூடிய நிலையில் அவர்கள் கீழே படுக்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கக்கூடிய நிலை தொடர்கிறது.

கட்டிடத்தை விரிவாக்கம் செய்து கூடுதல் படுக்கைகளை ஏற்படுத்தி தர வேண்டும், பிரேதப் பரிசோதனைக்கு தினந்தோறும் 5 முதல் 15 பிரேதங்கள் வரக்கூடிய நிலையில் ஒரே ஒரு நிரந்தர ஊழியர் மட்டுமே பணிபுரிவதால் பிரேதப் பரிசோதனைக்காக வருபவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கு அவர்களுக்கு தேவையான தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலை நீடிக்கிறது. ஊழியர்களுக்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் தேவையான அளவு மருத்துவமனையில் இல்லை, ஆரம்பச் சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் அவசர உதவிக்கு வரும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் சூழல் நிலவுகிறது. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருந்தும் கூட அவைகளுக்கு ஓட்டுநர் இல்லாததால்,அவை இயக்கப்படாத சூழல் நிலவுகிறது.

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தற்போது உள்ள மக்கள் தொகைக்கேற்ப கூடுதல் ஆம்புலன்ஸ் மற்றும் ஓட்டுநர்களை நியமித்திட வேண்டும். இந்த கோரிக்கைகளை மனுக்களாக சுகாதாரத் துறை அலுவலர்களிடம் வழங்க உள்ளோம். கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அடுத்த கட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...