சொத்துவரி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்..! - பொள்ளாச்சி நகர்மன்றத் தலைவர் வேண்டுகோள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் 50 சதவீதம் சொத்து வரி குறைக்கப்பட்டுள்ளதை, சில அரசியல் கட்சிகள் அரசியலாக்கி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், இது தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



கோவை: சொத்துவரி தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று பொள்ளாச்சி நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சொத்துவரி சீராய்வு செய்யப்பட்டபோது மற்ற நகராட்சிகளை விட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரிபல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பல்வேறு அரசியல் கட்சியினர், வணிகர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.



இதைத் தொடர்ந்து, வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.

இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி நகராட்சிக்கு சிறப்பு சலுகையாக 50% சொத்து வரியை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சில அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



தமிழகத்தில் சொத்துவரி சீராய்வு செய்யப்பட்ட போது பொள்ளாச்சி நகராட்சிக்கும் சொத்து வரி உயர்த்தப்பட்டது. மற்ற நகராட்சிகளை விட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி அதிகமாக உள்ளது குறைக்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தப்பட்டது கடந்த மார்ச் 31ஆம் தேதி 50 சதவீதம் குறைத்து அரசாணை வெளியிடப்பட்டது.

இதற்கு வணிகர்கள் பொதுமக்கள் தற்போது முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒரு சில அரசியல் கட்சியினர் இந்த பிரச்சனையை அரசியலாக்கி சுயலாபத்திற்காக மக்களிடம் தவறான பொய்யான தகவல்களை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

சொத்து வரி குறைக்கப்பட்டதற்கான வழிகாட்டு முறைகள் இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும். இது குறித்து எந்த சந்தேகங்கள் இருந்தாலும் நகராட்சியை பொதுமக்கள் அணுகலாம். வதந்திகளை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...