என்.டி.சி ஆலைகள் விவகாரம் - ஏப்.20ம் தேதி கஞ்சி காய்ச்சும் போராட்டம் அறிவிப்பு

கோவை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 7 என்டிசி நூற்பாலைகளில் உற்பத்தி தொடங்காததை கண்டித்து வரும் ஏப்.20ம் தேதி கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்த அனைத்துத் தொழிற்சங்கங்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் என்டிசி நூற்பாலைகளில் செயல்பட்டு வரும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஏஐடியுசி நூற்பாலை தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

தமிழகத்தில் உள்ள 7 ஆலைகள் உட்பட நாடு முழுவதும் 23 என்டிசி நூற்பாலைகள் செயல்பட்டு வந்தன. கொரோனா நோய்தொற்று முதல் அலை பரவிய 2020-ம் ஆண்டு மே 18-ம் தேதி முதல் என்டிசி நூற்பாலைகளில் உற்பத்திகள் நிறுத்தப்பட்டன. மூன்றாண்டுகளாக மீண்டும் உற்பத்தி தொடங்கப்படவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளில், பணி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர், செயலர், என்டிசி தலைமை அலுவலக உயரதிகாரிகளை நேரில் சந்தித்து பிரச்சினைகளை குறித்து எடுத்துக்கூறி மனு அளித்தும் இதுவரை உற்பத்தி தொடங்கப்படவில்லை.

எனவே, மத்திய அரசை கண்டித்து கோவைக்கு வரும் அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் என்டிசி தொழிலாளர்கள் சார்பில் கருப்புக்கொடி காட்டுவது, ஏப்ரல் 20-ம் தேதி கோவை 5 உட்பட தமிழகத்திலுள்ள 7 என்டிசி நூற்பாலைகளின் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில், எச்எம்எஸ் தொழிற்சங்கம் ராஜாமணி, ஏடிபி கோபால், சிஐடியு பத்மநாபன், ஐஎன்டியுசி பாலசுந்தரம், ஏஐடியுசி சிவசாமி, எம்எல்எப் தியாகராஜன், அப்தேக்கார் சங்கம் நீலமேகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...