தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூரில் ரூ.29 லட்சம் மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு பூமி பூஜை!

தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் பைப் லைன் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூரில் குடிநீர் பைப் லைன் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் சாலை பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவுண்டச்சி புதூர் ஊராட்சியில் குடிநீர் பைப் லைன் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்க சுமார் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெறவுள்ளன. இந்த பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.



இந்த பூமிபூஜையில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.



கவுண்டச்சி புதூர் ஊராட்சியில் 2022 மற்றும் 23 நிதியாண்டிற்கான 15வது நிதி குழு மாநிலத்தில் 29 லட்சத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டது.

அதில் உடுமலை சாலை ஏழாவது வார்டு பகுதியில் குறிஞ்சி நகர் மற்றும் சலவையாளர் காலனிக்கு சிமெண்ட் சாலை அமைக்க பதினைந்து லட்சமும் அலங்கியம் சாலையில் உள்ள மெட்ரோ சிட்டியில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதி மக்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதன்படி, அந்த பகுதிக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் பைப் லைன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் மெட்ரோ சிட்டி மற்றும் மலையம்மன் நகர் ஆகிய 2 நகர்களுக்கு 14 லட்சம் உள்ளிட்ட மொத்தம் 29 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் செல்வ ரமேஷ் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், ஊராட்சி துணை தலைவர் நாச்சிமுத்து, வார்டு உறுப்பினர் சரஸ்வதி தங்கவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் தன்னார்வலர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை ஊராட்சி செயலாளர் பெரியசாமி ஏற்பாடு செய்தார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...