வால்பாறையில் காலை சிற்றுண்டி கூடம் கட்டுவதற்கான பணிகள் துவக்கம்!

வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 36 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி குழந்தைகளுக்கு சிற்றுண்டி கூடத்திற்கான பூமி பூஜை மற்றும் கட்டிட பணிகள் வால்பாறை நகராட்சி தலைமை பொறியாளர் வெங்கடாசலம் முன்னிலையில் துவங்கி வைக்கப்பட்டது.



கோவை: வால்பாறையில் 36 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி குழந்தைகளுக்கு சிற்றுண்டி கூடத்திற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க அரசு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை வலியுறுத்தி வால்பாறையில் மூன்று இடங்களில் காலை சிற்றுண்டி கூடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் வால்பாறை பத்தாவது வார்டுக்கு உட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் 36 லட்சம் மதிப்பில் குழந்தைகளுக்கு வழங்கும் காலை சிற்றுண்டி கூடம் கட்டுவதற்காக திட்டமிடப்பட்டு இன்று வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.



இந்த நிகழ்வில், வால்பாறை நகராட்சி தலைமை பொறியாளர் வெங்கடாசலம் முன்னிலையில், நகர கழக செயலாளர் குட்டி (எ) சுதாகர், நகர மன்ற துணைத் தலைவர் த.ம.சா. செந்தில்குமார், நகர மன்ற உறுப்பினர் காமாட்சி, கோழிக்கடை கணேசன் ஆகியோர் பணியை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கோழிகடை கணேசன், மாவட்ட கழக துணை செயளாலர் ஈ.கா.சி பொன்னுச்சாமி,நகரக் கழக நிர்வாகிகள் சரவணபாண்டியன், டென்சிங்,நகர மன்ற உறுப்பினர்கள் JBR. பாஸ்கர், R.ரவிச்சந்திரன், GKM.மகுடீஸ்வரன், மற்றும் பழக்கடை செல்வம், மணிக்குமார் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...